ஆத்தூரில் மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய இறுதியாண்டு மாணவர்கள் ஊரக வேளாண் பணி மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மதுரை வேளாண்மை கல்லூரி மாணவர் ஆதித்ய வளவன் வாழை மரத்தில் பாரிங் மற்றும் பிராலினேஜ் குறித்து செயல்முறை விளக்கம் அளித்தார். அந்த செயல்முறை விளக்கத்தில் நோய்கள் மற்றும் நூற்புழுக்களை கட்டுப்படுத்த வாழை மரத்தில் பாரிங் மற்றும் பிராலினேஜ் செய்யும் முறையை விவசாயிகளிடத்தில் செயல்முறையாக செய்து காட்டிணார்.நோய்கள் மற்றும் நூற்புழுக்கள் இல்லாத 1.5 முதல் 2.0 கிலோ எடையுள்ள வாள் உறிஞ்சிகளைத் தேர்ந்தெடுத்து பாதிக்கப்பட்ட வேர்கள் மற்றும் அழுகிய பகுதியை நறுக்கி, கிழங்கின் மேல் பகுதியில் உள்ள தண்டுப்பகுதி 20 செ .மீ இருக்குமாறு தேர்ந்தெடுத்து தோல் சீவிய கன்றுகளை 4 பங்கு களி மண் மற்றும் 5 பங்கு நீர் கொண்ட சேற்றுக் குழம்பில் நனைத்து,அந்த நனைக்கப் பட்ட கிழங்கின் மீது கார்போபியூரான் 3 ஜி குருனையைத் தெளிக்குமாறு விவசாயிகளிடம் எடுத்துரைத்தார்.மேலும் ஒரு உறிஞ்சிக்கு 40 கிராம் கார்போ பியூரான் 3 ஜி குருனை கொண்டு பிராலினேஜ் செய்ய வேண்டும் என்பதையும் தெரிவித்தார்.வாடல் நோய் எதிர்ப்புத்திறன் இல்லாத இரகங்களாகிய ரஸ்தாளி , மொந்தன், நெய் வண்ணன் மற்றும் விருப்பாட்சி போன்ற இரகங்களுக்கு இவ்வாறு செய்யவேண்டும் என்றுரைத்தார்.



