நாகர்கோவில், அக்டோபர் 16 –
குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: ஆசாரிபள்ளம் கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரியில் 2025-26ம் கல்வி ஆண்டிற்கான மருத்துவம் சார்ந்த ஓராண்டு சான்றிதழ் பாட பிரிவுகளில் மாவட்ட அளவிலான நேரடி மாணவர் சேர்க்கை நவம்பர் 14ம் தேதி வரை நடைபெறுகிறது.
டெக்னீசியன்கள் எமர்ஜென்சி கேர் 4 இடங்கள், ரெஸ்பிராய்டரி தெரபி 5, அனஸ்தீசியா 4, தியேட்டர் 7, டயலாசிஸ் 1, ஆர்த்தோபெடிக் 29, மற்றும் மல்டிபர் பஸ் ஹாஸ்பிடல் ஒர்க்கர் 16 இடங்கள் உள்ளன. தகுதி வாய்ந்த மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மருத்துவம் சார்ந்த சான்றிதழ் படிப்புக்கு பிளஸ் 2 அறிவியல் பாடம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வுக்குழு பரிந்துரைப்படி, பல்வகை மருத்துவ பணியாளர் படிப்புக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்ப படிவங்கள் கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் அலுவலகத்தில் கட்டணம் இன்றி வழங்கப்படும். நிரப்பப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் அசல் சான்றிதழ்களை நவம்பர் 14ம் தேதிக்குள் ஆசாரிப்பள்ளம் கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரியில் நேரடி சேர்க்கையின் போது சமர்ப்பித்து கலந்து கொள்ளலாம். மொத்த பயிற்சி கட்டணம் ரூ.1450.
10, 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்று சான்றிதழ், பிறப்பிட சான்றிதழ், சாதி சான்றிதழ், வயது சான்று, (பிறப்பு சான்றிதழ், பள்ளி சான்றிதழ்) மாவட்ட மருத்துவ வாரியத்திடம் இருந்து பெறப்பட்ட மாற்றுத்திறனாளி சான்றிதழ், ஆதார் அட்டை, புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை மற்றும் புகைப்படம் 5 இணைக்கப்பட வேண்டும். இவ்வாறு செய்தி விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


