களியக்காவிளை, அக். 15 –
படந்தாலுமூட்டில் டீ குடிக்க வந்த வாலிபரை இரும்பு கம்பியால் தாக்கி காயப்படுத்திய இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். படந்தாலுமூடு மடிச்சல் பகுதியை சார்ந்தவர் முத்தையன் நாடார் மகன் பிரதீஷ் (43). இவர் படந்தாலுமூடு ஒரு டீ கடையில் டி குடிக்க வந்துள்ளார். அப்போது அங்கு டீ குடிக்க வந்த இரண்டு வாலிபர்கள் பாறசாலை, ஐங்காமம் பகுதியை சார்ந்தவர் ஜான்சன் மகன் பிரதீஷ் (24). அதே பகுதியை சார்ந்த கோபகுமார் மகன் ராகுல் (28).
இரண்டு பேருமாக சோர்ந்து பிரதீஷ் கால் முட்டில் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த முத்தையன் நாடார் மகன் பிரதீஷ் திருவனந்தபுரம் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிட்சை பெற்று வருகிறார். இது குறித்து களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து பிரதீஷ், ராகுல் இரண்டு வாலியர்களையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


