தஞ்சாவூர், அக்டோபர் 4 –
தஞ்சாவூர் மாவட்டத்தில் புதுக்குடி ஒரத்தநாட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் வகுப்பறை, சமூக நீதி விடுதிக் கட்டிடங்களை அமைச்சர்கள் கோவி. செழியன், மதிவேந்தன் ஆகியோர் ஆய்வு செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம் புதுக்குடி ஆதிதிராவிடர் உயர்நிலைப் பள்ளியில் பயின்று வரும் மாணவ மாணவிகளுக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்தித் தரும் நோக்கில் ரூபாய் .1 கோடியே 76 லட்சம் மதிப்பில் 6,125 சதுர அடி பரப்பளவில் கழிவறை வசதியுடன் கூடிய6 வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
இதேபோல் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் மாணவிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யும் வகையில் புதிதாக ரூபாய் 11 கோடியே 70 லட்சம் மதிப்பில் சமூக நீதி விடுதி கட்டப் பட்டு வருகிறது. 36 ஆயிரத்து 801 சதுர அடி பரப்பளவில் 250 மாணவி கள் தங்கும் வகையில் இந்த விடுதி கட்டப்பட்டு வருகிறது.
புதுக்குடி அரசு ஆதிதிராவிட உயர்நிலைப்பள்ளி வகுப்பறை மற்றும் ஒரத்தநாடு கல்லூரி மாணவிகள் சமூக நீதி விடுதி கட்டுமான பணிகளை உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியி னர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர் பின்னர் அமைச்சர் மதிவேந்தன் கூறியதாவது: ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகளும் தரமான உயர்கல்வி பெற வேண்டும் என்ற அடிப்படையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு வகையான வளர்ச்சித் திட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
சமூக நீதி விடுதியில் மாணவி களுக்கு தேவையான படிக்கும் அறை, சமையலறை, கழிப்பிட வசதி, குளியல் அறை, உள்விளை யாட்டு அரங்கம், இணையதள வசதி போன்றவை அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் ஆதிதிராவி டர் மாணவ மாணவிகள் இவற்றை முறையாக பயன்படுத்திக் கொண் டு தங்கள் கல்வியின் மூலம் வாழ்க்கை தரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். கட்டுமான பணிகளை உயர்த்த தரத்துடன் உரிய காலத்திற்குள் முடித்து பயன்பாட்டிற்கு அலுவலர்கள் கொண்டு வர வேண்டும்
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம், முரசொலி எம்பி, மாநகராட்சி துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ரவிச்சந்திரன், தாட்கோ மேலாளர் விஜயபாஸ்கர், தாட்கோ செயற் பொறியாளர் வெங்கடேசன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.



