திருவெண்ணெய்நல்லூர்.அக்.01-
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூரில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் எதிரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் இளவரசு தலைமை தாங்கினார். ஒன்றிய துணை செயலாளர்கள் சரவணன், ரமேஷ், தொகுதி அமைப்பாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் வழக்கறிஞர் மனோகரன், ஒன்றிய பொருளாளர் குப்பன் ஆகியோர் வரவேற்புரை ஆற்றினர். மாவட்டச் செயலாளர்கள் ஆற்றலரசு, சேரன், மாவட்ட செய்தி தொடர்பாளர் தமிழேந்தி, மாநில துணை செயலாளர் திருவேங்கடம் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
அப்போது திருவெண்ணெய்நல்லூர் வட்டாரத்தில் உள்ள கிராம பகுதிகளில் ஆதி திராவிடர், அருந்ததியர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்குதல், பயணியர் நிழற்குடை, அங்கன்வாடி மையம், நியாய விலை கட்டிடம், எரிக்கொட்டகை, சுடுகாடு ஏற்படுத்தித் தருதல், சுடுகாட்டு பாதை ஆக்கிரமிப்பை அகற்றி சாலை வசதி, அரசு பள்ளிகளில் தண்ணீர் வசதியுடன் கழிப்பறை மற்றும் சுற்றுச்சுவர், காட்டுப் பன்றிகளிடமிருந்து விவசாய நிலங்களை பாதுகாக்க சுற்று வேலி, வெள்ளப்பெருக்கால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க தடுப்புச் சுவர் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் விசிக நிர்வாகிகள் ஜோதி, வெற்றிவளவன், நீலத்துண்டு ஆறுமுகம், கக்கன், கலைஜி, தட்சணாமூர்த்தி, அரி, சமத்துவன், ராமதாசு, கலியமூர்த்தி, அய்யாசாமி, அருமைநாதன், சசிவளவன், ரங்கநாதன், ராமச்சந்திரன், முருகன், தமிழ்ச்செல்வி, வனிதா, விஜயலட்சுமி, அருமைராணி, அரிகிருஷ்ணன், ராஜ்குமார், அய்யப்பன், கோபாலகிருஷ்ணன், மாயக்கிருஷ்ணன், பாலசுப்பிரமணியன், பிரதாப், சதீஷ்குமார், ரமணா, மலை.ஆபேல், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



