ராமநாதபுரம், அக். 1 –
ராமநாதபுரம் மாவட்ட நாடார் பேரவை மாவட்டத் தலைவர் வேல்முருகன் அறிக்கையில் கூறியிருப்பதாவது: அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி வியாழக்கிழமை பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 51வது ஆண்டு நினைவு அஞ்சலியை முன்னிட்டு நாடார் பேரவை மற்றும் கிழக்கு ராமநாதபுரம் நாடார் உறவின்முறை சங்கம் சார்பாக அஞ்சலி செலுத்த உள்ளோம். அன்றைய தினம் காலை 10 மணி அளவில் ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருவி வழிவிடும் முருகன் கோயில் எதிர்புறம் கிழக்கு ராமநாதபுரம் நாடார் உறவின்முறை சங்கர் கட்டிடம் முன்பு பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் திருஉருவப்பட வைத்து மலர் தூவி மரியாதை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் மக்கள் பிரதிநிதிகள் அனைத்துக் கட்சி பிரமுகர்கள் திரளாக கலந்து கொண்டு மரியாதை செலுத்த உள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் நாடார் பேரவை மாநில தலைவர் பனை வாரிய நல வாரியத் தலைவர் எர்ணாவூர் நாராயணன், தென் மண்டல பொறுப்பாளர் விஸ்வநாதன், அமைச்சர் ராஜகண்ணப்பன், சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், எம் பி நவாஸ் கனி, ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட நாடார் உறவின்முறை சங்கத் தலைவர் பழனிச்சாமி நாடார் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன், திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் கருமாணிக்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மரியாதை செலுத்த உள்ளனர். இந்நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு பெருந்தலைவர் காமராஜர் நினைவை போற்ற வேண்டும். இவ்வாறு அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.



