நாகர்கோவில், செப். 27 –
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக மழை பெய்து வருகிறது. மேலும் நேற்று இரவு முதல் தொடங்கிய மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது. மேலும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மலைப்பகுதியில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக காளிகேசம் வனப்பகுதியில் உள்ள ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள தோட்ட தொழிலாளர்கள் மறுபுறம் கடந்து செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் வெள்ளம் கரை புரண்டு ஓடுவதால் அப்பகுதியில் இருக்கும் பொது மக்களுக்கும் தோட்ட தொழிலாளர்களுக்கும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளும் வன பகுதிக்கு வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தாழ்வான பகுதியில் இருக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.



