நாகர்கோவில், செப்டம்பர் 23 –
நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தடுப்பு சுவர் இல்லாத குளங்கள், கிணறுகள், பெரிய பள்ளங்கள் உள்ள இடங்களில் ரூ.40 லட்சம் செலவில் தடுப்பு சுவர் அமைக்கும் பணி மற்றும் 39-வது வார்டுக்கு உட்பட்ட பட்டாரியர் வடக்கு தெருவில் ரூ. 3.11 லட்சம் செலவில் கான்கிரீட் தரம் அமைக்கும் பணி இன்று நடந்தது.
இந்தப் பணிகளை மேயர் மகேஷ் நேற்று தொடங்கி வைத்தார். மேலும் மணி மணிமேடை சந்திப்பு முதல் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலை மற்றும் மணிமேடை சந்திப்பு முதல் பழைய மாநகராட்சி அலுவலகம் செல்லும் சாலை ஓரங்களில் மழை நீர் வடிகால் சீரமைத்து அதன் மேல் நடை பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை மேயர் மகேஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்நிகழ்ச்சிகளில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா, மண்டல தலைவர்கள் அகஸ்டினா கோகிலவாணி, மாநகர பொறியாளர் சரவணன், உதவி செயற்பொறியாளர் ரகுராமன், உதவி நகரமைப்பு அலுவலர் வேலாயுதம், இளநிலை பொறியாளர்கள் தேவி, ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.


