ஈரோடு, செப். 23 –
மறைந்த ஈரோடு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா நினைவு கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி ஈரோட்டில் நடந்தது. 2 நாட்களாக இரவு பகலாக நடந்த இந்த போட்டிக்கு வக்கீல் முருகானந்தம் தலைமை தாங்கினார். இளைஞர் காங்கிரஸ் மாநில துணை தலைவரும் ஈரோடு பொறுப்பாளருமானவக்கீல் தீபிகா மற்றும் அப்புக்குட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த போட்டியில் ஈரோடு மதுரை திருச்சி திருப்பூர் சேலம் கேரளா உள்பட 32 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. இதில் ஈரோட்டை சேர்ந்த பிளாக் பஸ் என்ற அணி 5 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 92 ரன் எடுத்து வெற்றி பெற்றது .
வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்க பரிசாக ரூ.50 ஆயிரம் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் ஈரோடு தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் திருவாசகம், ஈரோடு மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் திருச்செல்வம், வடக்கு மாவட்ட தலைவர் மக்கள் ராஜன், மாவட்ட துணைத்தலைவர் ராஜேஷ் ராஜப்பா, மற்றும் மாநகர மாவட்ட துணைத் தலைவர்கள் சதாம் உசேன் மாலிக் பாஷா மற்றும் சினேகா ஈரோடு மேற்கு சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் வாசத் மாநகர மாவட்ட செயலாளர் கல்கி உட்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாநில இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஆரிப் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.



