தஞ்சாவூர், செப்டம்பர் 20 –
தஞ்சாவூர் மாவட்டத்தில் “ரேபிஸ் இல்லா தஞ்சை “உருவாக்கும் திட்டத்தின் கீழ் வெறிநோய் தடுப்பூசி முகாமினை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தொடங்கி வைத்தார். தஞ்சாவூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் பிராணி கள் வதை தடுப்பு சங்கம் மற்றும் மிஷன் ரேபீஸ், கோவா இணைந்து “ரேபீஸ் இல்லா தஞ்சை” உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது அதன்படி மிஷன் ரேபிஸ் வெறிநோய் தடுப் த பூசி போடும் முகாமினை மாநகராட்சியின் 1வது வார்டு பகுதியான பள்ளியக்கரகாரத்தில் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தொடங்கி வைத்தார்.
தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி ,சட்டமன்ற உறுப்பினர் துரை. சந்திரசேகரன், மாநகராட்சி மேயர் சண் ராமநாதன், துணைமேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி முன்னிலை வகித்தனர். இத்திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் மாவட்டத்தில் 60 ஆயிரம் நாய்களு க்கு வெறி நோய் தடுப்பூசி போடு வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக நன்கு பயிற்சி அளிக்கப் பட்ட நாய் பிடிப்பவர்கள் ஒவ்வொரு தெருவாக சென்று நாய்களை வலை போட்டு பிடித்து தடுப்பூசி செலுத்தி நெற்றியில் அடையாளம் மிட்டு மிஷன் ரேபிஸ் செயலியில் பதிவேற்றம் செய்து விடுவிக்கப்படும்
தஞ்சாவூர் மாவட்டத்தில் நாய்க ளுக்கான 2 கருத்தடை மையங்கள் செயல்பட்டு வருகிறது. மேலும் 3 கருத்தடை மையங்கள் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 3,973 சமுதாய நாய்கள் கருத்தடை செய்து வெறிநோய் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ரேபீஸ் இல்லா தஞ்சை திட்டம் படிப்படியாக மாவட்டம் முழுவதும் விரிவு படுத்தப்பட உள்ளது. மேலும் வெறி நோய் தொடர்பாக ஏனைய தகவலுக்கு 24 மணி நேர தொலை பேசி எண் 8 110070701 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பயன்படலாம். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த முகாமில் கால்நடைத்துறை இணை இயக்குனர் டாக்டர் பாஸ்கரன், உதவி இயக்குனர் டாக்டர் சரவணன், வருவாய் கோட்டாட்சியர் நித்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



