களியக்காவிளை, செப். 20 –
கன்னியாகுமரி மாவட்டம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் களியக்காவிளை பேரூராட்சிக்குட்பட்ட படந்தாலுமூடு சேக்ரட் ஹார்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இன்று நடந்தது. இந்த முகாமினை விளவங்கோடு தொகுதி எம்.எல்.ஏ தாரகை கத்பர்ட் திருவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.
நலம் காக்கும் ஸ்டாலின் முகாமில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிட்சை, எலும்பியல், மருத்துவம், மகப்பேறு மருத்துவம், மகளிர் சிறப்பு மருத்துவம், குழந்தைகள் சிறப்பு மருத்துவம், இருதவியல், தோல், பல், கண், காது, மூக்கு, தொண்டை, மனநலம் பிசியோதெரபி, கதிரியக்கவியல், நுரையீரல், நீரழிவு, சித்த மருத்தவம் உள்ளிட்ட முழு உடல் 17 வகையான சிறப்பு வாய்ந்த உயர் சிகிட்சை மருத்துவ நிபுணர்கள் பங்கேற்று மருத்துவ சேவைகள் பொதுமக்களுக்கு வழங்கினர்.
அத்துடன் முதல் அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை மாற்றுத் திறனாழிகளுக்கான சான்றிதழ்கள், தொழிலாளர்கள் நல வாரிய அட்டை உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன. மருத்துவ முகாமில் சுகாதார அதிகாரிகள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள், களியக்காவிளை பேருராட்சி தலைவர் சுரேஷ், செயல் அலுவலர் சந்திரகலா மற்றும் பணியாளர்கள், படந்தாலுமூடு சேக்ரட் ஹார்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் தோமஸ் சத்தியநேசன், முதல்வர் சிந்து ஜோசப் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த மருத்துவ முகாம் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



