தருமபுரி, செப்டம்பர் 19 –
தருமபுரி மாவட்டம் தருமபுரி கோ-ஆப் டெக்ஸ் நெல்லிக்கனி விற்பனை நிலையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சதீஸ் தீபாவளி – 2025 சிறப்பு தள்ளுபடி விற்பனையினை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து முதல் விற்பனையை துவக்கி வைத்து பார்வையிட்டார். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கவிதா, இணை இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் சாந்தி, கோ-ஆப்டெக்ஸ் துணை மண்டல மேலாளர் செல்வி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதி சந்திரா, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சாந்தி, தமிழ்நாடு மாநில ஊரக / நகர்புற வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) திட்ட இயக்குநர் லலிதா, ஆவின் பொது மேலாளர் மாலதி, தருமபுரி விற்பனை நிலைய விற்பனை மேலாளர் ரெஜினா, மாவட்ட தீயணைப்பு அலுவலர் செல்வி அம்பிகா மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.



