திருப்பூர், செப். 17 –
திருப்பூரில் சமூக அடிமைத்தனம், சாதிய ஏற்றத் தாழ்வு, பெண்ணடிமை போன்ற சூழ்ச்சிகளால் பல ஆயிரம் ஆண்டுகால அடிமைத்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த வெண்தாடி புரட்சியாளர், சுயமரியாதை சூட்டை கிளப்பிய பகுத்தறிவு சூரியன்
தந்தைபெரியார் அவர்களின் பிறந்தநாளில் திருப்பூர் மத்திய மாவட்டம் வடக்கு மாவட்டம் தி.மு.க சார்பில் மாவட்ட கழக அலுவலகங்களில் மாவட்ட கழக செயலாளர்கள் க. செல்வராஜ் எம்.எல்.ஏ, மேயர் தினேஷ்குமார் அவர்களது தலைமையில் கழக நிர்வாகிகள் அனைவரும் அன்னாரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்திய பின்னர் கொள்கை சுடர் விளக்கை நெஞ்சில் ஏந்தி சமத்துவத்திற்கான சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்றனர்.
இந்நிகழ்ச்சியில் மண்டல தலைவர்கள் தம்பி கோவிந்தராஜ், உமா மகேஸ்வரி, மகளிரணி நிர்வாகிகள், பகுதிச் செயலாளர்கள், வட்டக் கழக செயலாளர், பேரூர் ஒன்றிய கழக செயலாளர், சார்பு அணி நிர்வாகிகள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.



