திருவெண்ணெய்நல்லூர், செப். 16 –
கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் திமுக கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட காந்தலவாடி கிராமத்தில் பேரறிஞர் அண்ணா 117-வது பிறந்த நாளை முன்னிட்டு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு ஆணைக்கிணங்க, மாவட்ட செயலாளர் உதயசூரியன் எம்.எல்.ஏ அறிவுறுத்தலின் பேரில் ஏ.ஜெ. மணிக்கண்ணன் எம்.எல்.ஏ ஆலோசனை பேரில் ஒன்றிய செயலாளர் மா. சந்திரசேகரன் வழிகாட்டுதல்படி காந்தலவாடி கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ராஜா தலைமையில் அண்ணாவின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கி உறுதிமொழி ஏற்றனர். இதில் திமுக கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.



