திருவெண்ணெய்நல்லூர், செப். 13 –
திருவெண்ணெய்நல்லூர் அருகே உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம் நடைபெற்றது. திருவெண்ணெய்நல்லூர் அருகே திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இளந்துறை கிராமத்தில் பாவந்தூர், பெண்ணைவலம் ஆகிய ஊராட்சிகளுக்கு உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. முகாமிற்கு பி.டி.ஒ, முல்லை தலைமை தாங்கினார். மாவட்ட கவுன்சிலர் பி.வி.ஆர். விசுவநாதன், ஒன்றிய சேர்மன் ஓம்சிவசக்திவேல், தாசில்தார் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பி.டி.ஓ, பாலசுப்பிரமணியன் அனைவரையும் வரவேற்றார்.
முகாமில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் கண்காணிப்பாளர் துணை ஆட்சியர் சுந்தர் ராஜன் கலந்து கொண்டு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, பட்டா பெயர் மாற்றம், மின் இணைப்பு பெயர் மாற்றம், ரேஷன் கார்டு உள்ளிட்ட 15 துறைகள் சார்ந்த பொது மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். மேலும் முகாமில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது. இதில் துறை சார்ந்த அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.



