கோவை, ஆக. 12 –
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டம் தொடங்க முக்கிய காரணமாக இருந்த பெருந்தலைவர் காமராசர், முன்னாள் அமைச்சர் சி. சுப்பிரமணியம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் வி.கே. பழனிசாமி மற்றும் பொள்ளாச்சி நா. மகாலிங்கம் ஆகியோரது திருவுருவச் சிலைகள் வி.கே. பழனிசாமி அரங்கம் மற்றும் பொள்ளாச்சி நா. மகாலிங்கம் அரங்கம் ஆழியாறு அணையின் பூங்காவில் பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டப் பணிகள் நடைபெற்றபோது ஏற்பட்ட விபத்தில் உயிர் நீத்தவர்களுக்கான நினைவு மண்டபம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியிலுள்ள நீர்வளத் துறையின் தலைமைப் பொறியாளர் அலுவலக வளாகத்திற்கு “சி. சுப்பிரமணியம் வளாகம்” என்று பெயர் சூட்டப்பட்டு அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டம் தொடங்க முக்கிய காரணமாக இருந்த பெருந்தலைவர் காமராசர், முன்னாள் அமைச்சர் சி. சுப்பிரமணியம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் வி.கே. பழனிசாமி மற்றும் பொள்ளாச்சி நா. மகாலிங்கம் ஆகியோருக்கு நிறுவப்பட்டுள்ள திருவுருவச் சிலைகளை திறந்து வைத்தார்.
அவ்வளாகத்தில் 4 கோடியே 29 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வி.கே. பழனிசாமி அரங்கம் மற்றும் பொள்ளாச்சி நா. மகாலிங்கம் அரங்கம் ஆகியவற்றையும், ஆழியாறு அணையின் பூங்காவில் 2 கோடியே 83 இலட்சம் ரூபாய் செலவில் பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டப் பணிகள் நடைபெற்றபோது ஏற்பட்ட விபத்தில் உயிர் நீத்தவர்களுக்கான நினைவு மண்டபத்தையும் திறந்து வைத்தார்.
இந்த விழாவில் மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புர வளர்ச்சி துறை அமைச்சர் சு. முத்துசாமி, மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி, மாண்புமிகு மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ், முன்னாள் அமைச்சர் கண்ணப்பன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் வே. ராஜாராமன் நீர்வளத்துறை செயலாளர் ஜெ. ஜெயகாந்தன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் மரு. இரா. வைத்திநாதன், கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பவன்குமார் ஜி. கிரியப்பனவர், முன்னாள் அமைச்சர் சி. சுப்பிரமணியம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் வி.கே. பழனிசாமி மற்றும் பொள்ளாச்சி நா. மகாலிங்கம் ஆகியோரின் குடும்பத்தினர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பரம்பிகுளம் ஆழியாறு பாசனத் திட்ட விவசாயிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



