கோவை, செப். 29 –
கோவை வடக்கு மாவட்ட கழக சார்பாகவும் அறிஞர் அண்ணா நகர் அருள்மிகு ஸ்ரீ கம்பீர சித்தி விநாயகர் திருக்கோயிலில் அமைந்துள்ள திருமண மண்டபத்தில் திருக்கோயிலின் சார்பாகவும், ஆரோ மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சார்பாகவும் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமானது மிகச்சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் இடையர்பாளையம் பகுதிக் கழக பொறுப்பாளர் திரு.மதியழகன், 35 வது வட்டக் கழக அவைத்தலைவர் சோ. துரைப்பாண்டியன், வட்டக் கழக செயலாளர் திரு. ஆர். குமரேசன், மாமன்ற உறுப்பினர் திரு.நா. சம்பத் மற்றும் கழக உடன்பிறப்புகள், பிஎல்ஏ2, பிஎல்சி, கழக நிர்வாகிகள், பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை செய்து கொண்டதுடன் டாக்டர்களிடம் ஆலோசனை பெற்று சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.



