ஈரோடு, ஆக. 16 –
மொடக்குறிச்சி ஒன்றியம் லக்காபுரம் பஞ்சாயத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் செயலர் சந்தோஷ் ராஜா தீர்மானங்களை வாசித்தார். மொடக்குறிச்சி வட்டார வளர்ச்சி ஒன்றிய உதவியாளர் பால சுப்பிரமணியன் பற்றாளராக கலந்து கொண்டு அரசின் திட்டங்களை பொது மக்களிடம் விளக்கி கூறினார். இந்த கூட்டத்தில் ஜல்ஜீவன் திட்டம் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் உள்பட பல்வேறு தீர்மானங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
துய்யம் பூந்துறை பஞ்சாயத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் மொடக்குறிச்சி சமூக நலத்துறை அலுவலர் தெய்வானை பற்றாளராக கலந்து கொண்டு பேசினார். இதில் கிராம நிர்வாக அலுவலர் ஹேமாவதி பொது மக்களின் சந்தேகங்களுக்கு பதில் அளித்து பேசினார். கூட்டத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்கள் குறித்து பொது மக்களுக்கு விளக்கி கூறப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை துய்யம் பூந்துறை பஞ்சாயத்து செயலர் முருகானந்தம் ஏற்பாடு செய்திருந்தார்.



