தஞ்சாவூர், அக்டோபர் 4 –
மகாத்மா காந்தி பிறந்த நாள்விழா மற்றும் தீபாவளியையொட்டி கதர் சிறப்பு விற்பனை தொடக்க விழாவில் கதர் ஆடைகளை வாங்கி நெசவாளர் வாழ்வில் ஒளி வீச வேண்டும் என மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வேண்டுகோள் விடுத்துள்ளார். தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் எதிரே ராணுவத்தினர் மாளிகையில் உள்ள கதர் அங்காடியில் தமிழ்நாடு கதர் கிராம வாரியத்தின் சார்பில் நடைபெற்ற சிறப்பு விற்பனை நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் கலந்து கொண்டு, மகாத்மா காந்தி உருவப்படத்தை திறந்து வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்தி னார் . தீபாவளி கதர் சிறப்பு விற்பனை தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் கூறியதாவது: 2025-26 ஆண்டிற்கு தஞ்சாவூர் மாவட்டத்திற்கு ரூபாய் ஒரு கோடியே 16 லட்சத்து 50 ஆயிரம் விற்பனை இலக்க நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இலக்கை அடைவதற்கு கதர் துறையால் தயார் செய்யப்படும் அசல் வெள்ளி ஜரிகை, பட்டு, ரகங்கள் கதர் ரகங்கள், பாலிஸ்டர் ரகங்கள், உல்லன் ரகங்கள் ஆகியவை வாடிக்கையாளர்களை கவரும் வண்ணம் புத்தம் புதியவடிவமைப் பில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
சுத்தமான இலவம் பஞ்சினால் மிக நேர்த்தியாக தயார் செய்யப்பட்ட மெத்தை மற்றும் தலையணைகள், காட்டன் மெத்தை விரிப்புகள், இவை அனைத்தும் தஞ்சாவூர் கதர் அங்காடியில் கிடைக்கும். அனைத்து கதர், பாலிஸ்டர், பட்டு ரகங்களுக்கு 30 சதவீதம் மற்றும் உல்லன் ரகங்களுக்கு 20 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
அரசு துறை பணியாளர்களுக்கு மாத ஊதியத்தில் 10 தவணைகளில் திரும்ப செலுத்தும் வகையில் கடன் முறையில் கதர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் தாங்கள் தங்கள் ஆதரவை தொடர்ந்து வழங்கி தமிழகத்தில் உள்ள நூற்பாளர்கள், நெசவாளர்கள் வாழ்க்கையில் ஒளி வீச உதவ வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.



