களியக்காவிளை, செப். 11 –
குழித்துறை பகுதியை சேர்ந்தவர் அஜித் (31) டெம்போ டிரைவர். இவரது மனைவி ஆஷா (28) குழித்துறை நகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளராக உள்ளார். அஜித்துக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. நேற்று மனைவி வேலைக்கு சென்றார். மாலையில் வீடு வந்த போது அஜித் வீட்டில் தூக்கு போட்டு இறந்த நிலையில் காணப்பட்டார்.
இது குறித்து புகாரின் பேரில் களியக்காவிளை போலீசார் அஜித்தின் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஆஷா அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


