விளாத்திகுளம், செப்டம்பர் 08 –
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள முள்ளூர் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 9 லட்சத்து 77 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய நியாய விலை கட்டிடத்தினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை விநியோகம் செய்தார்.
அதனைத்தொடர்ந்து கொல்லம்பரம்பு கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூபாய் 9 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய நியாயவிலை கட்டிடம் கட்டுவதற்கான பணியினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி கட்டுமான பணியினை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் வட்ட வழங்கல் அலுவலர் ராஜேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சசிகுமார், ஜவகர், ஓட்டப்பிடாரம் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் காசி விஸ்வநாதன், முள்ளூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராமசாமி, கொல்லம்பரம்பு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கௌரி கருணாகரன் மற்றும் திமுக நிர்வாகிகள், கிராம பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.



