திருவண்ணாமலை அக். 9 –
திருவண்ணாமலை அடுத்த கீழ்பென்னாத்தூர் தொகுதிக்குட்பட்ட சோமாசிப்பாடி ஊராட்சி, புதுமைமாதாநகர் வேடநத்தம் ஊராட்சி, அருந்ததியர் நகர், வேளானந்தல் ஊராட்சி, அரசங்குப்பம் கோணலூர் ஊராட்சி, ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதி, திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்திலுள்ள அண்டம்பள்ளம், காந்திநகர், துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள கருமாரப்பட்டி ஊராட்சி, ராமநாதபுரம் மாதலம்பாடி ஊராட்சி, பச்சையப்பன் நகர், மருத்துவாம்பாடி ஊராட்சி, கொட்டாமேடு ஆகிய பகுதிகளில் கூட்டுறவு துறை சார்பில் பகுதிநேர நியாயவிலை கடைகள் திறப்புவிழா நடந்தது.
இந்த விழாவுக்கு கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் எஸ்.பார்த்திபன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் ஆராஞ்சி ஏ.எஸ்.ஆறுமுகம் ராஜேந்திரன் சி.மாரிமுத்து வி.பி.அண்ணாமலை ஆகியோர் முன்னிலை வகிக்க துணை பதிவாளர் (பொது விநியோக திட்டம்) வினேத் அனைவரையும் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி நியாயவிலைக்கடைகளை திறந்து வைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவு பொருட்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.
இதில் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர் சிவக்குமார், கூட்டுறவு சார்பதிவாளர்கள் தமிழரசி செல்வம், பிரதாப், செயலாட்சியர் குமரவேல், அட்மாகுழு தலைவர் சிவக்குமார், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர்கள் வெங்கடேசன், வெங்கடாஜலம், வேலு, மாவட்ட கூட்டுறவு ஒன்றிய உதவியாளர் ஏ. வெற்றி, ஊராட்சி செயலாளர்கள் எஸ். கண்ணன், சங்கர், விற்பனையாளர்கள் ஆர். வேல்முருகன், கே. பிரகாஷ் உள்பட அரசு அலுவலர்கள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுக முன்னோடிகள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் வட்ட வழங்கல் அலுவலர் ஜெ. ரமேஷ் நன்றி கூறினார்.



