நீலகிரி. எபரல்.03.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் நூற்றாண்டு பழமை வாய்ந்த அரசு லாலி மருத்துவமனையில் தன்னார்வலர்கள் சார்பில் 70 லட்சம் ரூபாய் மதிப்பில் படுக்கை வசதிகளுடன் மகளிர் உள் நோயாளி பிரிவு புனரமைக்கப்பட்டதை மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா திறந்து வைத்தார்.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த அரசு மருத்துவமனை யான லாலி மருத்துவமனை உள்ளது.
இதில் குன்னூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் நாள்தோறும் இங்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
இந்த நிலையில், சில வருடங்களாக சிதிலமடைந்து மிகவும் மோசமான நிலையில் காணப்பட்ட இந்த மருத்துவமனையை குன்னூரில் உள்ள மைக்ரோ லேண்ட் அறக்கட்டளை தன்னார்வலர்கள் குழுவினர் ஒன்றாக இணைந்து மருத்துவமனையை சுமார் 70 லட்சம் மதிப்பில் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர்.
இதில், நோயாளிகள் படுக்கும் வகையில் புதிய கட்டில் மெத்தைகள், கழிப்பிடங்கள், ஓய்வெடுக்கும் அறைகள், காற்றோட்ட வசதிகள், மேம்படுத்தப்பட்ட ஒளி அமைப்புகள், சுடுநீர் வசதி செவிலியர்களுக்கான நவீன வசதிகள் தனித்துவமான இட வசதிகள், உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகளுடன் கூடிய சிறப்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதனை இன்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.
பின்பு அவர் பேசுகையில், அரசு அனைத்தும் செய்து கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு இல்லாமல், தன்னார்வலர்கள் சிறப்பாக பணிகளை மேற்கொள்கின்றனர்.
இந்த கூட்டணியில் அரசு மற்றும் தனியார் துறைகளின் சக்திகள் ஒன்றிணைந்து ஒரு பொதுவான இலக்கை அடைய உதவுகின்றன. இது ஒரு சிறந்த பொது-தனியார் கூட்டாண்மை உதாரணமாகும்,” என பாராட்டு தெரிவித்தார்.



