கன்னியாகுமரி நவ 12
கன்னியாகுமரி அருகேயுள்ள மகாதானபுரம் ரவுண்டானா சந்திப்பு தேசிய கொடி கம்பம் அருகில் உள்ள பகவதியம்மாள்புரத்தில் வெற்றிவேல் முருகனுக்கு 39-வது ஆண்டு ஆராட்டு விழா. நேற்று நாஞ்சில் நாடு புத்தனார் ஆற்றில் முருக பெருமானுக்கு ஆராட்டு நடந்தது.
ஆராட்டு நிகழ்வின்போது திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலர் தூவி வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா என கோஷமிட்டு வழிபட்டனர்.
பின்னர் பால்,பன்னீர்,குங்குமம்,சந்தனம்,களபம்,தேன்,இளநீர்,தயிர்,பஞ்சாமிர்தம்,விபூதி முதலியவற்றால் முருக பெருமானுக்கு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தது. தொடர்ந்து வாணவேடிக்கை, ஆன்மிக சொற்பொழி, சமய கருத்தரங்கம் போன்றவை நடந்தது.
முன்னதாக ஆராட்டு ஊஞ்சல் வளையாபதி ஸ்ரீசுயம்பு இல்லத்தில் இருந்து சிறப்பு பூஜை செய்யப்பட்டு ,மேளதாளத்துடன் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.