கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பவானி கிராண்ட் பேலஸ் மண்டபத்தில், தேசிய சட்ட பணிகள் ஆணையக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்ட சேவைகள் ஆணைய குழுவின் சார்பாக, மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் . ஆர்.ஹேமலதா அவர்கள் மாவட்ட முதன்மை நீதிபதி .வி.ஆர்.லதா அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் .ச.தினேஷ் குமார் அவர்கள் முன்னிலையில் மரக்கன்றுகளை நடவு செய்யும் பணிகள் மற்றும் பசுமையான சுற்றுச்சூழலை உருவாக்கம் குறித்த விழிப்புணர்வு கருந்தரங்கை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து உரையாற்றினார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . பெ.தங்கதுரை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் .கவிதா, மாவட்ட வன அலுவலர் . பகான் ஜெகதீஷ் சுதாகர் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் . திருலோக சுந்தர், மாவட்ட சட்ட சேவைகள் மைய செயலர் . ஜெயந்தி உள்ளிட்ட பலர் உள்ளனர்.



