நாகர்கோவில் மே 25
ஐந்து நிமிட கோடை மழை அப்படியே சரிந்து வீட்டின் மேல் விழுந்த 300 அடி செல்போன் டவர் குலுங்கிய வீடு
அலறித் துடித்த பெண்கள் குமரியில் நடந்த பரபரப்பு சம்பவம்.
குமரி மாவட்டம் இரணியலை அடுத்த நுள்ளி விளை பகுதியில் உள்ள இழப்பவிளையில் கணவனை இழந்த
பெண் தனது இரு மகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில்
நேற்று இரவு பலத்த காற்றுடன் பெய்த கோடை மழையால் 300 அடி நீளம் கொண்ட தனியார் செல்போன் டவர் அப்படியே சரிந்து அருகிலுள்ள வீட்டின் மீது
விழுந்து பெரும் விபத்து ஏற்பட்டது.
இது குறித்து அந்த வீட்டில் உள்ள பெண் கூறும்போது:-
நேற்று காலை முதலே சாரல் மழை பெய்து வந்தது இரவு திடீரென பலத்த காற்றுடன் கன மழை பெய்தது.
அப்போது தனது வீட்டிற்கு எதிரில் உள்ள தனியார் நிலத்தில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட 300 அடி நீளம் கொண்ட தனியார் செல்போன் டவர் அப்படியே சரிந்து தனது வீட்டின் மீது விழுந்தது. வீடு அப்படியே குலுங்கி முன்பகுதி உடைந்து விழுந்தது. நானும் எனது மகள்களும் வீடு அப்படியே இடிந்து நம் தலையில் விழப்போகிறது என்று அலறி துடித்து எங்களைக் காப்பாற்றுங்கள் என்று உரக்கச் சத்தமிட்டு கூச்சலிட்டோம். சற்று நேரத்தில் காற்றும் மழையும் நின்றது
நாங்கள் நீண்ட நேரமாக அதிர்ச்சியில் உறைந்து போய் இருந்தோம். பின்னர் வெளியே வந்து பார்த்தால் எங்கள் வீட்டின் முன்பு இருந்த 300 அடி நீளம் கொண்ட செல்போன் டவர் எங்கள் வீட்டின் மீது விழுந்து கிடப்பதை கண்டோம் அது மட்டுமல்லாமல் வீட்டின் எதிரே உள்ள மூன்று மின் கம்பங்கள் உடைந்து அப்பகுதி முழுவதும் மின் வினியோகம் தடைபட்டு இருள் சூழ்ந்து காணப்பட்டது.
உடனடியாக அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து எங்களுக்கு உதவி செய்யும் பொருட்டு அரசு அதிகாரிகளுக்கும், காவல்துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இரணியல் காவல் நிலைய போலீசார், அனைத்து விதமான முன் உதவிகளையும் செய்தனர். அதனைத் தொடர்ந்து எஸ் பி ஸ்டாலின் எங்கள் பகுதிக்கு வந்து சம்பவம் நடந்த இடங்களை பார்வையிட்டு எங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தி சென்றார்.
20 வருடங்களுக்கு மேலாக இப்பகுதியில் உள்ள 300 அடி நீளம் கொண்ட செல்போன் டவர் எந்த ஒரு பராமரிப்பு பணியும் மேற்கொள்ளப்படவில்லை. மேலும் இந்த தனியார் செல்போன் டவர் 2018 ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டில் இல்லை எனவே இதனை இப்பகுதியில் இருந்து உடனடியாக மாற்றித்தர ஊர் மக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
ஆனால் இந்நாள் வரையிலும் எந்த ஒரு அரசு அதிகாரியும் செயலற்று இருக்கும் இந்த 300 அடி செல்போன் டவரை வந்து பார்க்கவும் இல்லை இதனை இப்பகுதியில் இருந்து அகற்ற எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை.
சாதாரண பொதுமக்கள் தங்கள் பகுதியில் பெரும் அசம்பாவிதம் நடைபெறும் முன் இந்த செல்போன் டவரை இப்பகுதியில் இருந்து அகற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியருக்கு மனு கொடுத்தும் அதனை மாவட்ட ஆட்சியரும் அதிகாரிகளும் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டதால் இன்று இந்த 300 அடி செல்போன் டவரால் பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது.
அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை ஆனால் அந்த வீட்டின் உள் இருந்த மூன்று பெண்களும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி மனதளவில் பெரும் பாதிப்பு ஏற்படுத்தி உள்ளது. மேலும்
தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான 300 அடி செல்போன் டவர் சரிந்து விழுந்ததில் தங்களுடைய வீடு இடிந்து நாசமாகி உள்ளது. எனவே இந்த டவரால் இடிந்து நாசமான தங்களுடைய வீட்டிற்கு தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும்.
அதேபோல் செயலற்று கிடந்த டவரை இப்பகுதியில் இருந்து அகற்ற மனு கொடுத்தும் அதனை கண்டு கொள்ளாமல் இருந்த துறை சார்ந்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஊர் மக்கள் கேட்டுக் கொண்டனர்