கோவை, ஆகஸ்ட் 26 –
கோவை மாவட்டம் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகலில் 3 கோடி மதிப்பிலான பணிகளை அடிக்கல் நாட்டுதல் மற்றும் திறப்பு விழாவினை நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா MP தபால் தந்தி காலனி, காந்திநகர், மாணிக்கவாசகர் நகர் வின் கார்டன், தாமு நகர், ஐஸ்வர்யா நகர், சந்திராமணி நகர், ஸ்ரீராம் நகர், துரைசாமி நகர், முல்லை நகர், அண்ணாமலை நகர், சாமி செட்டிபாளையம், செல்வபுரம் திருமலை நாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் கூடலூர் நகராட்சி மன்ற தலைவர் அ. அறிவரசு தலைமையில் ஆணையாளர் அ. மதுமதி முன்னிலையிலும் திறந்து வைத்தார்.
உடன் திமுக செயற்குழு உறுப்பினர் T.R. சண்முகசுந்தரம், வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, நகராட்சி மன்ற துணைத் தலைவர் ரதி ராஜேந்திரன், நகராட்சி பொறியாளர் சோமசுந்தரம், 27 வது வார்டு உறுப்பினர் கல்யாணசுந்தரம், 21-வது வார்டு உறுப்பினர் ஜனார்த்தனன், 16 வது வார்டு உறுப்பினர் பாலசுப்ரமணியம், சித்ரா, மணிமேகலை, ரம்யா, ரேவதி நகர மன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியின் போது கூடலூர் நகராட்சி 27-வது வார்டு பூங்கா வேண்டி விண்ணப்பம் தபால் தந்தி ஊழியர் குடியிருப்பு நலசங்கம் சார்பில் வழங்கப்பட்டது. செயலாளர் D.M. அய்யப்பன் பொருளாளர் சண்முகம், துணை தலைவர் நடராஜன், துணை செயலாளர் மூர்த்தி மற்றும் சீனிவாசன், முன்னாள் தலைவர் மாரியப்பன், முன்னாள் செயலாளர் தாமோதரன் மற்றும் ஜெயக்குமார், வெங்கடாசலம் ஆகியோர் ஆ. ராசா எம்பி யிடம் மனு கொடுத்தனர்.



