தஞ்சாவூர் மார்ச் 5.
தஞ்சாவூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு தொடங்கியது .இதில் 27 ஆயிரத்து 174மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர்.
தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு தொடங்கியது.இந்த தேர்வு 27ஆம் தேதி வியாழக்கிழமை வரை நடைபெறுகிறது.
இந்தத் தேர்வினை 105 அரசு பள்ளி 40 அரசு உதவி பெறும் பள்ளி 84 தனியார் பள்ளி கலை சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர் .தேர்வு 63 அரசு பள்ளி 29 அரசு உதவி பெறும் பள்ளி 18 தனியார் பள்ளி என மொத்தம் 110 இடங்களில் நடைபெற்றது.
தஞ்சை மாவட்டத்தில் 14, ஆயித்து658 மாணவர்களும், 13 ஆயிரத்து 9 மாணவிகளும் என மொத்தம் 27 ஆயிரத்து 667 மாணவ மாணவிகள் தேர்வு எழுத விண்ணப் பித்து இருந்தனர். இதில் தஞ்சாவூர் கல்வி மாவட்டத்தில் 8616 மாணவர்களும் 7929 மாணவிகளும் என மொத்தம் 16 ஆயிரத்து 545 பேரும், கும்பகோணம் கல்வி மாவட்டத்தில் 6 ஆயிரத்து42 மாணவர்களும் 5 ஆயிரத்து 80 மாணவிகளும் என மொத்தம் 11 ஆயிரத்து 122 பேர்தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர் .இதில் 493பேர் தேர்வு எழுத வரவில்லை .27 ஆயிரத்து 174 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர்.
தேர்வு மையங்களில் மாணவர் கள் தேர்வு எழுதுவதற்கு தேவை யான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு இருந்தன. தேர்வு வினாத்தாள் 5 மையங்களில் வைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு ள்ளது .இந்த மையங்களில் இருந்து 30 வழித்தடங்களில் வழித்தட அலுவலர்கள் மற்றும் துப்பாக்கி ஏந்திய போலீசாருடன் பாதுகாப் பாக வினாத்தாள் அனுப்பி வைக்கப்பட்டது.
மாற்றுத்திறனாளி மாணவர்கள் 205 பேரும் மாணவிகள் 145 பேரும் தரைத்தளத்தில் தேர்வு எழுத உரிய வசதிகள் செய்யப்பட்டு இருந்தன. தேர்வு முறைகேடுகளை கண்காணிக்க 155 பறக்கும் படை அமைக்கப்பட்டு ரோந்து சுற்றிய வண்ணம் இருந்தனர் .ஒவ்வொரு தேர்வு மையங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது
தஞ்சாவூர் அரண்மனை வளாக த்தில் உள்ள அரசர் மேல்நிலைப் பள்ளி மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அண்ணாதுரை உடன் இருந்தார்