நவ. 4
திருப்பூர், மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துவராஜ் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர்.விஜய லலிதாம்பிகை தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கிருஷ்ணமூர்த்தி சிரஞ்சீவி ஆகியோர் அடங்கிய குழுவினரால் தென்னம்பாளையம் மார்க்கெட் மற்றும் அதன் சுற்றியுள்ள ரோட்டோர கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின் போது ரோட்டோர கடையில் ஒரு பெண்ணிடம் வெளியூரிலிருந்து இருந்து விற்பனைக்காக கொண்டுவரப்பட்டு பிளாஸ்டிக் டப்பா மற்றும் சாக்கு பையில் வைக்கப்பட்டிருந்த 25 கிலோ அளவிலான இறந்த கோழி இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. இதுபோன்ற இறந்த கோழிகளை வாட்டி சுத்தம் செய்து மஞ்சள் பூசி நாட்டுக்கோழி என விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டது. மேலும்
கோழிப்பண்ணை உரிமையாளர்கள் இறந்த கோழிகளை சுகாதார முறைப்படி குழி தோண்டி புதைக்க வேண்டும் எக்காரணத்தைக் கொண்டும் விற்பனை செய்யக்கூடாது. என எச்சரிக்கப்பட்டது. மேலும் கோழி இறைச்சி விற்பனை செய்பவர்கள் கோழிகளை கொள்முதல் செய்வதற்கான,விற்பனை செய்வதற்கான பில்களை முறையாக பராமரிக்க வேண்டும்,இறைச்சி கடைகளை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பராமரிக்க வேண்டும், மேலும் இறைச்சி கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும். அனைத்து இறைச்சி விற்பனை செய்யும் கடைகளும் உணவு பாதுகாப்பு துறையின் உரிமம், பதிவு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் பொதுமக்கள் கோழி இறைச்சி வாங்கும் பொழுது சுத்தமானதாகவும் கண்முன்னே உயிருடன் வெட்டி கோழி இறைச்சி வாங்கிச் செல்ல வேண்டும், டப்பாக்களிலும் சாக்கு பைகளிலும் வைத்து விற்பனை செய்யும் கோழி இறைச்சிகளை வாங்கக்கூடாது. எனவும் அறிவுறுத்தப்பட்டது.மேலும் இது போன்ற ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். மேலும்
உணவு பற்றி புகார்களுக்கு 9444042322 என்ற எண்ணுக்கு புகார் அளிக்கலாம்.