திண்டுக்கல், மே:-19
திண்டுக்கல், குமரன் திருநகரில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் 21 ம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது.
திண்டுக்கல் 16வது வார்டு குமரன் திருநகர் பகுதியில் கடந்த 20 வருடங்களாக “விழுதுகள்”சுரபி” பௌர்ணமி” உதயம்” வெற்றி” இயற்கை” பாஸ்ட்” பசுமை” முகில்” புதுமலர்” மின்னல்” விடியல்” கேப்டன்” பாரத மாதா” உள்ளிட்ட 14 மகளிர் சுய உதவி குழுக்களின் ஒருங்கிணைப்பாளர் ஜெயலட்சுமி நாகராஜன் தலைமையில் 21ம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில், சிறப்பாக செயல்பட்ட மகளிர் சுய உதவி குழுவினருக்கு ஒருங்கிணைப்பாளர் ஜெயலட்சுமி நாகராஜன் தலைமையில் செல்வி சி.ஓ,எச்.டி.எப்.சி.வங்கி கிளை சீனியர் ஆபிசர்கள் மதுபாலா, கார்த்திக், ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்து மகளிர் சுய உதவி குழுவினருக்கு நினைவு பரிசு வழங்கி கௌரவித்தனர். இந்நிகழ்வில் அனைத்து குழுவில் இருக்கும் சுய உதவி குழு தலைவிகளும், உறுப்பினர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.