போகலூர், அக். 7 –
ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி மக்களுக்கு வருடந்தோறும் தொடர்ந்து தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் பண்டிகை காலங்களில் அதிமுக மருத்துவரணி துணை செயலாளர் முன்னாள் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் வேஷ்டி, சேலை, சட்டை மற்றும் நிதியுடன் கூடிய பரிசு பொருட்களை வழங்கி வருகிறார். அந்த வகையில் நேற்று 2025 ம் ஆண்டுக்கான தீபாவளி பரிசு வழங்கும் நிகழ்ச்சி ராமநாதபுரம் வெங்கடேஸ்வரா திருமண மகாலில் நடந்தது. திருப்புல்லாணி கிழக்கு ஒன்றிய செயலாளர் கருப்பையா வரவேற்றார். நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் தீபாவளி பரிசு தொகுப்புகளை வழங்கி பேசும் போது, ” 2026 எடப்பாடியார் தலைமையில் அதிமுக ஆட்சி அமையும் அப்போது ராமநாதபுரம் பஸ் ஸ்டாண்ட் பெயர் மாற்றம் செய்து வரலாற்று சிறப்புமிக்க மன்னர்களின் பெயர் சூட்டப்படும், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மண்ணின் மைந்தர்களின் பெயர்தான் பஸ் ஸ்டாண்டுக்கு வைக்க வேண்டும் அதைத் தவிர்த்து வேறு பெயர் வைப்பதை ஏற்க முடியாது கண்டிப்பாக பஸ் ஸ்டாண்ட் பெயர் மாற்றப்படும்” என்றார்.
முன்னாள் மாவட்ட அதிமுக செயலாளர் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் கே.சி. ஆணிமுத்து முன்னிலை வகித்தார். முன்னாள் மாவட்ட துணை செயலாளர் ராமசேது, ராமநாதபுரம் நகர் அவைத்தலைவர் ராமமூர்த்தி, அதிமுக வழக்கறிஞர் சங்கரபாண்டியன், கீழக்கரை நகர் செயலாளர் ஜகுபர் உசேன், ராம்கோ முன்னாள் தலைவர் சுரேஷ், திருப்புல்லாணி முன்னாள் ஒன்றிய செயலாளர் ராமதாஸ், புதுமடம் முஜிபுர் ரகுமான், நயினார் கோயில் சிவகுமார், வாலாந்தரவை குமார், நகர் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஆதில் அமீன், நகர் தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் சாய்சரவணன், ஆர்.எஸ்.மடை கிளை செயலாளர் சுரேஷ், கீழக்கரை செல்வகணேசபிரபு, திருப்புல்லாணி மத்திய ஒன்றிய பொருளாளர் செல்வகுமார், திருப்புல்லாணி ஒன்றிய அவைத்தலைவர் ராஜேந்திரன், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் தினகரன், பாக்கியநாதன், வீரபாண்டி, காஞ்சிரங்குடி பாலு, தினைக்குளம் நாகசாமி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் நாகநாதன், பிரேமா சரவணன், முனியாயி செவத்தான், கே.கே. வலசை பழனிக்குமார், சீனியப்பா தர்ஹா பச்சைமால், மண்டபம் கஜேந்திரன், பூசேரி அருண்குமார், ராமநாதபுரம் நகர் நிர்வாகி விவேக், வார்டு செயலாளர்கள் ரமேஷ், கோகுலகிருஷ்ணன், நகர் தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர்கள் சபீக்ரகுமான், சந்தோஷ்குமார் உள்பட திருப்புல்லாணி கிழக்கு, மத்திய, மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட கிளை கழக செயலாளர்கள், பூத் கமிட்டி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.



