மார்த்தாண்டம், ஜன- 24
தக்கலை அருகே பள்ளி மாணவி ஒருவர் கடந்த 26.12.2024 ம் தேதி விளையாட்டு போட்டிக்கு சென்று விட்டு திரும்பினார். அந்த சிறுமியை கடத்தி பாலியல் தாக்குதலில் ஈடுபட்டதாக மணலிக்கரை முஸ்லீம் தெரு பகுதியை பைசல்கான்(40), மேக்காமண்டபம் பகுதி ரதீஷ்(27) ஆகிய இருவர் மீதும் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அந்த இரு பாலியல் குற்றவாளிகளின் மீதும் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் அடிப்படையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா மேற்படி பாலியல் குற்றவாளிகள் இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன் பேரில் குண்டர் சட்டத்தின் கீழ் 2 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.