சிவகங்கை மாவட்டம் தமறாக்கி அரசனூர் ஸ்ரீ மந்தையம்மன் கோவில் 13 ஆம் ஆண்டு கும்பாபிஷேக விழா மற்றும் ஸ்ரீ சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
இதனை முன்னிட்டு
அரசனூர் மந்தை அருகே உள்ள மந்தை அம்மன் கோவில் மற்றும் புதிதாக கட்டியுள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நடத்த ஊர் மக்கள் இரண்டு மாதத்திற்கு முன்பு முடிவு செய்தனர்.காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது இதனைத் தொடர்ந்து முதல் கால யாகசாலை பூஜை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து காலை யாக சாலையில் வைக்கப்பட்டுள்ள புனித நீர் கலசங்களுடன் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது இதனை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் கலசங்களை தலையில் சுமந்து கோவிலை சுற்றி வந்து கோவில் கோபுரத்திற்கு காலை 9 மணி அளவில் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது.
இதனை முன்னிட்டு
சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். வருகை புரிந்த பக்தர்களுக்கு விழா கமிட்டியின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.