தருமபுரி மாவட்ட, நகர திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தென்னாட்டு காந்தி பேரறிஞர் அண்ணாவின் 116- வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. கிழக்கு மாவட்ட செயலாளர்தடங்கம் பெ. சுப்பிரமணி தலைமையில் ராஜகோபால் கவுண்டர் பூங்காவில் இருந்து நான்கு ரோடு வரை அமைதி பேரணியாக சென்று பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதில் நகரச் செயலாளர் நாட்டான்மாது, நகர மன்ற தலைவர் லட்சுமி நாட்டான் மாது, மே.அன்பழகன், முல்லைவேந்தன், ரவி, கனகராஜ், காசிநாதன், தங்கமணி, சுருளிராஜன் மற்றும் மாவட்ட, நகர கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.



