குத்தாலம் திரௌபதி அம்மன் ஆலய 106ம் ஆண்டு தீமிதி திருவிழாவின் ஒரு பகுதியாக ஊஞ்சல் உற்சவமும் மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது:-
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் பழமை வாய்ந்த திரௌபதி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது.ஆலயத்தின் ஆண்டு வைகாசி மாத தீமிதி உற்சவம் கடந்த 12ஆம் தேதி ஆலயத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கி தினம்தோறும் மகாபாரத சொற்பொழிவுகள் நடைபெற்று வந்தன 15 ஆம் நாள் உற்சவமாக தீமிதி திருவிழா கடந்த திங்கட்கிழமை வெகு விமர்சையாக நடைபெற்றது அதனைத் தொடர்ந்து 16 ஆம் நாள் உற்சவமாக நேற்று முன்தினம் திரௌபதி அம்மன் வண்ண மலர்மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு பின்னர் ஊஞ்சலில் எழுந்தருளி ஊஞ்சல் உற்சவமனது நடைபெற்றது தொடர்ந்து மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடத்தப்பட்டன இந்நிகழ்ச்சியின் நிறைவாக பரதநாட்டியம் ஆடிய மாணவிகளுக்கு நினைவு பரிசாக கேடயம் வழங்கப்பட்டன இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை கண்டு களித்தனர் இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை திரௌபதி அம்மன் கோயில் நிர்வாக குழுவினர் சார்பாக செய்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.