சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றியம்
ரெங்கசமுத்திரம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ 10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பல்நோக்குமைய கட்டிடம் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது.
மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ கலந்துகொண்டு பல்நோக்கு மையக் கட்டிடத்தை திறந்து வைத்து பேசினார்.
இதில் மாவட்ட சிறுபான்மையுடன் நல உரிமை பிரிவு தலைவர் மரியலூயிஸ் பாண்டியன், மாவட்ட பிரதிநிதிகள் சண்முகப்பாண்டியன், செந்தூர்பாண்டியன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் மகாராஜன், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் பூலியூர் கணேசன்,
ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் ராஜதுரை, ஒன்றிய விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் கோட்டைப்பாண்டி, கிளைக் கழகச் செயலாளர் பாபு, மரியலூயிஸ், கோபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.