மார்த்தாண்டம், ஆக. 30 –
சிவசேனா சார்பில் 80 விநாயகர் சிலைகளும், 1008 வீட்டு பிள்ளையார் சிலைகளும் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டது. மேல்புறத்திலிருந்து பிரம்மாண்ட ஊர்வலம் நடந்தது.
ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி கன்னியாகுமரி மாவட்ட சிவசேனா சார்பில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு 80 விநாயகர் சிலைகளும், 1008 வீட்டுப் பிள்ளையார் சிலைகளும் பூஜைக்கு வைக்கப்பட்டது .
தினசரி பூஜைகள் முடித்து அளப்பன்கோடு கோயிலில் இருந்து இன்று மதியம் ஊர்வலம் துவங்கியது. மேல்புறம், வட்ட விளை, கழுவன்திட்டை, குழித்துறை ஜங்ஷன், வெட்டுவெந்நி வழியாக குழித்துறை வாவுபலி பொருட்காட்சி திடல் வந்தடைந்தது.
இதற்கு மாவட்ட தலைவர் வக்கீல் சுரேஷ் பிரகாஷ் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் மணிபாரதி, தமிழ்நாடு மற்றும் புதுவை மாநில பொறுப்பாளர் சிதறால் ராஜேஷ் ஆகியோர் ஊர்வலத்தை துவக்கி வைத்தனர்.
அருவிப்புரத்தைச் சேர்ந்த சந்த்ரானந்த சுவாமிகள், அகில பாரதிய சன்னியாசிகள் சங்கத்தைச் சார்ந்த பத்மானந்த சரஸ்வதி சாமிகள், ராஜ யோகினி பிரம்மகுமாரி கோகிலா உட்பட பலர் கலந்து கொண்டனர். விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு குழித்துறை தாமிரபரணி ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டது.



