By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 90 பயனாளிகளுக்கு ரூ.1.22 கோடி மதிப்பில்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > 90 பயனாளிகளுக்கு ரூ.1.22 கோடி மதிப்பில்
அரியலூர்மாவட்டம்

90 பயனாளிகளுக்கு ரூ.1.22 கோடி மதிப்பில்

Last updated: December 12, 2024 11:10 am
December 12, 2024 27 Views
Share
SHARE

அரியலூர், டிச;12


அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டம், கோவிந்தபுரம் கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில் நேற்று நடைபெற்றது.


இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது,


தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி ஒவ்வொரு மாதமும் மக்கள் தொடர்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதனைத்தொடர்ந்து நேற்றைய தினம் அரியலூர் வட்டம், கோவிந்தபுரம் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் அனைத்துத் துறை மாவட்ட நிலை அலுவலர்களும் கலந்து கொண்டு தங்களது துறை சார்ந்து செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கமாக எடுத்துரைத்ததுடன் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களும் பெற்று தீர்வு காணப்பட்டது. இம்முகாமிற்காக ஏற்கனவே பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 65 மனுக்கள் பெறப்பட்டு, 34 மனுக்கள் ஏற்கப்பட்டும், 01 மனு தள்ளுபடி செய்யப்பட்டும், 30 மனுக்கள் விசாரணையிலும் உள்ளது. மேலும், நேற்றைய தினம் நடைபெற்ற இம்முகாமில் 26  கோரிக்கை மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது.


இம்முகாமில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் 02 பயனாளிகளுக்கு பட்டா மாற்றம் ஆணைகளும், சமூக பாதுகாப்புத் திட்டத்தின் சார்பில்  05 பயனாளிகளுக்கு ரூ.87,500 மதிப்பில் நலத்திட்ட உதவிகளும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 02 பயனாளிகளுக்கு ரூ.26,698 நலத்திட்ட உதவிகளும், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை (பொது விநியோகம்) 06 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும், வேளாண்மைத் துறையின் சார்பில் 01 பயனாளிக்கு ரூ.4,648 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், தோட்டக்கலைத்துறையின் சார்பில் 02 பயனாளிகளுக்கு ரூ.12,250 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், கூட்டுறவுத்துறையின் சார்பில் 07 மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.67,72,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், கோவிந்தபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி சார்பில் 65 பயனாளிகளுக்கு ரூ.53,11,602 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும் என மொத்தம் 90 பயனாளிகளுக்கு ரூ.1,22,14,598 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் நேற்றையதினம் வழங்கப்பட்டுள்ளது, 


இம்முகாமில், வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, கூட்டுறவுத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளரச்சித்திட்டம், சமூக நலத்துறை, சுகாதாரத் துறை, வருவாய்த்துறை, தமிழ்நாடு ஊரக வாழ்வதார இயக்கம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் அனைத்துத் துறை மாவட்ட நிலையிலான அலுவலர்கள் தங்களது துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் திட்டங்கள் அதனை பெறும் வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கமாக எடுத்துரைத்துள்ளார்கள். எனவே, பொதுமக்கள் இத்தகைய முகாம்களை பயன்படுத்தி தங்களுக்கு தேவையான திட்டங்களை அறிந்து விண்ணப்பித்து பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தெரிவித்தார்.

 

தொடர்ந்து, இம்முகாமில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டபணிகள், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறை, வேளாண்மைத் துறை உள்ளிட்ட தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் அரசின் நலத்திட்ட உதவிகள் குறித்து வைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை மாவட்ட ஆட்சித்தலைவர்  பார்வையிட்டார்.


இம்முகாமில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆ.ரா.சிவராமன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் ரவிச்சந்திரன், கூட்டுறவுத்துறை மண்டல இணைப்பதிவாளர் தீபாசங்கரி, அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் மணிகண்டன், சமூக பாதுகாப்பு திட்டம் துணை ஆட்சியர் (பொ) கீதா, அரியலூர் வட்டாட்சியர் முத்துலெட்சுமி, கோவிந்தபுரம் ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன் மற்றும் அனைத்துத்துறை மாவட்ட நிலை அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்

You Might Also Like

பூதப்பாண்டியில் உங்களுடன் ஸ்டாலின்

ரூ 4.23 கோடி ஊழல் முறைகேடு; தர்மபுரம் முன்னாள் ஊராட்சி தலைவி மீது நடவடிக்கை எடுத்திட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாலை மறியல் போராட்டம்

குழித்துறையில் மீனவர் தூக்கு போட்டு தற்கொலை

தேரூரில் 16.50 இலட்சம் ரூபாய் செலவில் புதிய காங்கிரீட் தளம் அமைக்கும் பணி

பொய் புகார் அளிக்க சதி திட்டம் தீட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திமுக பகுதி கழக இளைஞர் அணி துணை அமைப்பாளர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
கனஂனியாகுமரி

மாணவிகளுக்கு நலத்திட்ட உதவி:ஜவான் அய்யப்பன் பங்கேற்றார்

May 27, 2025 14 Views
இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு தொடக்கவிழா
சென்னை மாவட்ட 32 வது பொதுக்குழு கூட்டம்
மத்திய அரசை கண்டித்து ரயில் நிலைய முற்றுகை
48ஆம் நாள் மண்டல பூஜை விழா.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?