சங்கரன்கோவில், அக். 02 –
தென்காசி மாவட்டம் சங்கரன் கோவிலில் களப்பாகுளம் உடப்பன்குளம் இணைப்புச் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ மகா சக்தி வராகி அம்மன் திருக்கோவிலில் நவராத்திரி திருவிழா 22 ஆம் தேதி முதல் இரண்டாம் தேதி வரை பத்து நாட்கள் நடைபெற்றது. இந்த கோவில் விழாவில் அம்மனுக்கு யாக பூஜை அபிஷேகம் அலங்காரம் தொடர்ந்து நடைபெற்றது. பிஜேபி கட்சியின் தென்காசி மாவட்ட தலைவர் ஆனந்தன் அய்யாசாமி திருக்கோவிலுக்கு வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தார்.
அதன் பின்னர் நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவருடன் நகரத் தலைவர் யூபிவி, உதயகுமார், மற்றும் பிஜேபி நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மகாசக்தி வராகி அம்மன் திருக்கோவில் திருவிழா ஏற்பாடுகளை தலைமை பூசாரி சக்திவேல், பரம கணேசன், குழுவினர் கொண்ட பூசாரிகள் பக்தர்கள் ஒன்றிணைந்து ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.



