சிவகங்கை, ஆகஸ்ட் 26 –
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக பின்புற மைதான வளாகத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் துணை வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டம் 2025-2026ன் கீழ் விவசாயிகளுக்கு மானிய விலையிலான வேளாண் இயந்திரங்களை கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் வழங்கினார்.
உடன் மாவட்ட ஆட்சியர் கா. பொற்கொடி, மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ. தமிழரசி ரவிக்குமார் தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் சத்யா, சிவகங்கை நகர்மன்ற தலைவர் சி.எம். துரை ஆனந்த், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் தர்மர் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள், விவசாய பெருங்குடி மக்கள் ஆகியோர் பலர் கலந்து கொண்டனர்.



