கிருஷ்ணகிரி, மார்ச் 20 –
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் பர்கூர் சட்டமன்றத் தொகுதி மாவட்ட துணை செயலாளர் ஆக போச்சம்பள்ளி செந்தில் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கட்சியின் மாநில தலைவர் திருமாவளவன் எம்பி அவர்களை சந்தித்து சால்வை அணிவித்து நன்றி தெரிவித்து ஆசி பெற்றார்.
அதனை தொடர்ந்து மண்டல துணைச் செயலாளர் ஜிம் மோகன், சட்டமன்றத் தொகுதி மாவட்ட செயலாளர் மாதையன், இளம் சிறுத்தை எழுச்சி பாசறை மாறிய செயலாளர் வழக்கறிஞர் சங்கத்தமிழ் சரவணன், மாநில துணைச் செயலாளர் முனி ராய், விடுதலை கட்சியின் தொழிலார் அணி பாநில செயலாளர் பழனி, ஒன்றிய செயலாளர் திருப்பதி மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து மாவட்ட துணை செயலாளர் செந்தில்குமார் சால்வை அணிவித்து ஆசி பெற்றார். உடன் கட்சி நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர்.



