மார்த்தாண்டம், டிச. 1 –
கலிங்கராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் சரத் (33). அதே ஊரை சேர்ந்த ஆகாஷ் (22). இருவரும் நண்பர்கள். நேற்று இரவு வீட்டில் அருகே உள்ள விளையாட்டு மைதானத்தில் சரத் சக நண்பர்களுடன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு போதையில் வந்த ஆகாஷ், சரத்தை தகாத வார்த்தைகள் பேசி, அவரது தலையில் கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். காயமடைந்த சரத் குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நித்திரவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து ஆகாஷை கைது செய்தனர்.



