நாகர்கோவில், மே 12 –
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக கட்சி 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதையடுத்து காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவுடன் தற்போது ஆட்சியை பிடித்துள்ளது.
முதலில் ஆட்சி அமைக்க போதிய ஆதரவு இன்றி இழுபறி நிலை நீடித்ததால் தெவக தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் வள்ளியூர் பகுதி இந்திரா காலனியை சேர்ந்த தவெக வள்ளியூர் ஒன்றிய தொண்டரணி இணை அமைப்பாளரான இசக்கியப்பன் (43) என்பவர் ஜோசப் விஜய் ஆட்சி அமைக்க முடியாத இழுபறி நிலையால் மனமுடைந்த நிலையில் இருந்தார்.
கடந்த 9ம் தேதி பழவூர் விஸ்வநாதபுரம் சோதனை சாவடி அருகே இசக்கியப்பன் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்றார். அங்கிருந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் உடனடியாக அவரை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த இசக்கியப்பன் இன்று காலை உயிரிழந்தார். இந்த சம்பவத்த தொடர்பாக பழவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இறந்த இசக்கியப்பன் தொடக்க காலத்தில் இருந்து விஜய் ரசிகர் மன்றத்தில் இருந்து வந்தவர்.



