தருமபுரி, டிசம்பர் 27 –
தருமபுரி இந்திய தொழிற்சங்க மையம் அலுவலகத்தில் மாவட்ட ஜாக்டோ ஜியோ சார்பில் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் தமிழக அரசு 2021 – ம் ஆண்டு தேர்தல் கால வாக்குறுதி படி பழைய ஓய்வூதிய திட்டத்தை உடன் அறிவிக்க வேண்டும். அரசு பணியில் சேர்ந்தோருக்கு பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தினை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்துடன் அமல்படுத்த வேண்டும்.
இடைநிலை ஆசிரியர்களுக்கு, முதுகலை ஆசிரியர்களுக்கு, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, உடற்கல்வி இயக்குனர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு ஒன்றிய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்படாமல் இழைக்கப்பட்டு வரும் அநீதி களையப்பட வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை மாநாட்டில் முன் முன்வைக்கப்பட்டது. 2026 ஜனவரி 6- ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யப்படுவதாக தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து 2018 வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்றவர்களை கௌரவித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆசிரியர், அரசு ஊழியர், அரசு பணியாளர்கள் அமைப்பினர் கலந்து கொண்டனர்.



