இராமேஸ்வரம், செப். 30 –
நடிகர் விஜய்யின் கரூர் பரப்புரையின் போது உயிரிழந்த 40 நபர்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டி அக்னி தீர்த்த கடற்கரையில் மலர் தூவி அஞ்சலி செலுத்திய புரோகிதர்கள்.
நடிகர் மற்றும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பரப்புரையை மேற்கொள்ள கடந்த செப்டம்பர் 13-ம் தேதி திருச்சியில் முதல் பரப்புரையை தொடங்கினார். இதில் கரூர் மாவட்டத்தில் விஜய் பரப்புரை மேற்கொண்ட போது கூட்ட நெரிசலில் சிக்கி தற்போது வரை 41 நபர்கள் உயிர் இழந்துள்ளனர். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் சோகத்தினை ஏற்படுத்தி உள்ளது. இதில் இறந்தவரின் ஆத்மா சாந்தி அடைய வேண்டி தமிழ்நாடு பிராமணர்கள் சங்கம் ராமேஸ்வரம் கிளை மற்றும் சார்பில் அக்னி தீர்த்தம் கடலில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.



