ராஜாக்கமங்கலம், ஜன. 29 –
நாகர்கோவில் குருசடி பகுதியை சேர் குருசடி – தம்மத்து கோணம் செல்லும் சாலை பகுதியில் ராமன் துறை பகுதியை சேர்ந்த மதுகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது. நேற்று காலை வெட்டு காயங்களுடன் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். தகவல் அறிந்த ராஜகமங்கலம் போலீசார் வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் ராஜாக்கமங்கலத்தை அடுத்த கோவில்புரம் பகுதி சேர்ந்த டெம்போ டிரைவர் கண்ணன் (44) என்பது தெரியவந்தது. அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என் என்றும் தெரிந்தது. இந்த குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கண்ணனை கொலை செய்தது யார் என்று கோணத்தில் மர்ம நபர்கள் குறித்து விசாரித்தனர். அதே நேரம் தனிப்பிரிவு போலீசாரும் துப்பு துலக்க விசாரணை தொடங்கியுள்ளனர்.
தொடர்ந்து போலீசார் சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். இதனை தொடர்ந்து போலீசார் சந்தேகத்தின் பேரில் கோவில்புரம் பகுதியில் சேர்ந்த 3 பேர் மற்றும் நாகர்கோவில் கோணம் பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர் என 4 பேர் மீது விசாரணை நடத்தி வருகின்றனர். எனினும் பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும், 4 பேரிடம் விசாரணை முடிந்த பிறகு கொலை குறித்து முழுவதும் தெரியவரும் என போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.



