தருமபுரி, ஜூலை 27 –
தருமபுரியில் இந்திய அரசு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம், மை பாரத் கேந்திரா, தருமபுரி சார்பில் மாவட்ட அளவிலான “Nasha Mukt Yuva for Viksit Bharat” நிகழ்ச்சி “Drug Free India” என்ற கருப்பொருளில் நடத்தப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில் பின்வரும் 8 போட்டிகள் நடத்தப்படுகின்றன:
- நாட்டுப்புறப் பாடல் குழுப் போட்டி (5 – 10 நபர்கள்),
- நடனக் குழுப் போட்டி (5 – 10 நபர்கள்),
- நாடகப் போட்டி
- ஓவியப் போட்டி (தனிநபர்)
- விவாதம் / பேச்சுப் போட்டி
- குறும்படம் / ரீல்ஸ் போட்டி
- முழக்கம் (Slogan) எழுதும் போட்டி
- கவிதை பேசும் (Slam Poetry) போட்டி
இப்போட்டிகளில் கலந்து கொள்ள விரும்புவோர் MY Bharat இணையதளம் அல்லது Google Form மூலம் பதிவு செய்து கொள்ளுமாறு ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான இணையதள இணைப்பும் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு மின்னஞ்சல் வாயிலாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.முன்னதாக நிகழ்ச்சி நடைபெறும் தேதி, நேரம் மற்றும் இடம் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, நிகழ்ச்சியின் விவரங்கள் பின்வருமாறு:
நிகழ்ச்சி நடைபெறும் தேதி : 28.07.2026 (செவ்வாய்க்கிழமை),
நேரம் : காலை 9.00 மணி,
இடம் : சக்திகைலாஷ் மகளிர் கல்லூரி, மாட்லாம்பட்டி, தருமபுரி.
ஏற்கனவே இணையத்தில் பதிவு செய்துள்ள அனைத்து போட்டியாளர்களும் காலை 9.00 மணிக்குள் தவறாமல் வருகை தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
வரும் போது கீழ்க்கண்ட ஆவணங்களை கட்டாயம் கொண்டு வர வேண்டும்.
ஆதார் அட்டையின் நகல், தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அல்லாத, ஆனால் தருமபுரி மாவட்டத்தில் உள்ள பள்ளி அல்லது கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர் தாங்கள் பயிலும் பள்ளி / கல்லூரியின் அடையாள அட்டையின் நகலையும் கட்டாயம் கொண்டு வர வேண்டும். அனைத்து போட்டியாளர்களும் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாக வருகை தந்து பதிவு மற்றும் சரிபார்ப்பு பணிகளை நிறைவு செய்து ஒத்துழைக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் தகவல்களுக்கு 8428455241 / 7806959971 மாவட்ட இளைஞர் அலுவலர் மை பாரத் கேந்திரா தருமபுரி.



