மதுரை, ஆக. 5 –
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில், 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கிழக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சந்திரசேகர் தலைமை வகித்தார் வட்டார கிளை தலைவர் குமார் முன்னிலை வகித்தார் மாவட்ட பொருளாளர் அமுத அரசன் கோரிக்கை விளக்க உரை ஆற்றினார் மாவட்ட துணைச் செயலாளர் அருண் நன்றி உரை கூறினார்.
தொடர்ந்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், காலிப் பணியிடங்களை நிரப்புதல், ஊதிய முரண்பாடுகளை களையுதல், பதவி உயர்வு, பணிப் பாதுகாப்பு, ஓய்வூதிய திட்ட மேம்பாடு உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினர். கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டங்கள் தொடரும் என்றும் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.



