அவிநாசி, ஆக. 22 –
தாலுகா ஆபீஸ் எதிரிலுள்ள செல்வநாயகி பொது இசேவை மையம் ஜெராக்ஸ் கடையில் 10 வயது மாற்றுத்திறனாளி குழந்தைக்கு ஆதார் எடுக்க ரூ.750 பணத்தை வலுக்கட்டாயமாக வாங்கிய கடை உரிமையாளர் கடந்த இரண்டு நாட்களாக ஆதார் எடுக்காமல் அலைகழிப்பு செய்த நிலையில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் இலவச ஆதார் எடுத்த பிறகும்கூட பணத்தை திரும்ப தராமல் மாற்றுத்திறனாளி குழந்தையை அவமதிப்பு செய்து பணத்தை மோசடி செய்த செல்வநாயகி பொது இசேவை மையம் ஜெராக்ஸ் கடையின் உரிமையாளர் மீது உடனே நடவடிக்கை எடுக்க கோரி மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள் சட்டம், 2016 கீழ் வழக்கு பதிந்து கடுமையான நடவடிக்கை எடுத்து மாற்றுத்திறனாளிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டுவது சம்பந்தமாக சமூக ஆர்வலர் ஈ.பி. சரவணன் புகார் மனு வழங்கினார்.



