மார்த்தாண்டம், மார்ச் 9 –
கன்னியாகுமரி மாவட்டம் மாவட்ட வழங்கல் அலுவலரின் உத்தரவின் படி மாவட்ட பறக்கும் படை தனி வட்டாட்சியர் பாரதி தலைமையில் டிரைவர் ஜாண் பிரைட் பறக்கும் படை குழுவினரால் கல்குளம் வட்டம் பகுதியில் பொது வினியோக திட்ட கடத்தல் தடுப்பு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
சாமியார் மடத்தில் சந்தேகத்திற்கு இடமாக சென்ற லேலண்ட் லாரியை சோதனை செய்த போது சுமார் 10000 (பத்து ஆயிரம் கிலோ) பொது வினியோக திட்ட அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதிகாரிகளை கண்டதும் வாகனத்தை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடினார்.
இந்த அரிசி கேரளா மாநிலத்திற்க்கு கடத்தி செல்ல இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து கடத்தல் வாகனமும் அரிசியும் கைப்பற்றப்பட்டு பொது வினியோக திட்ட அரிசியை காப்புக்காடு அரசு நுகர் பொருள் வாணிப கழக கிட்டங்கியில் ஒப்படைக்கப்பட்டது. கடத்தல் வாகனம் விளவங்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டது.



